ஆண்டவன் கனவு

இரவின் இருளுக்கு பயந்து
கைக்கும் எட்டாத தூரத்தில் ஒளிந்துகொள்கிறது
உறக்கம் நடுக்கத்தோடு
அழைத்தும் வெளி வர மறுத்து

தனிமையின் வெம்மை தாளாது
உலர்ந்து கிடக்கும் நொடிகளை
சுமந்து செல்ல விருப்பமின்றி
கடிகார முள்
மெதுவாய் நகர்கிறது

எல்லாமும் சரியாக இருப்பதான
நினைப்போடு எந்த வித அடிப்படை தொடர்புகளற்ற
நானும் நானின்மையும் இன்னும் சில
எதார்த்தங்களையும் ஒன்று சேர்த்து
கனவொன்றை காணும்
இறைவனுடைய நிகழ்காலத்தின் வலியுணர்ந்து
வருத்தம் கொள்கிறேன்!

பகிர்வுந்தில் (share Auto) என் தொடை உரசி அமர்ந்திருக்கும்
அந்த ஆன்மாவுக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை
நான் ஆண் அது பெண் என்பதை தவிற!

3 :பின்னூட்டங்கள்:

Dreamzz February 16, 2008 at 6:26 PM  

nalla post.
can u remove word verification pls

இராவணன் February 16, 2008 at 8:17 PM  

thanks.Yes removed.this is my new blog. jus now noticing that.

MSK / Saravana May 22, 2008 at 1:51 AM  

அருமை நண்பரே..

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP