தூரங்கள்
1.
காலுதறி
ஓடத்துவங்கி வெகுநாட்கள் ஆகிறது
இன்னும்
எவ்வளவு தூரம்
தவழ்ந்துகொண்டே துரத்துமோ
அந்த குழந்தை
2.
அந்த
முதல் வார்த்தைக்காக
இன்னும் எவ்வளவு
பேச வேண்டி இருக்குமோ
இன்னும் எவ்வளவு மௌனங்களை
கடந்து செல்ல வேண்டுமோ
1.
காலுதறி
ஓடத்துவங்கி வெகுநாட்கள் ஆகிறது
இன்னும்
எவ்வளவு தூரம்
தவழ்ந்துகொண்டே துரத்துமோ
அந்த குழந்தை
2.
அந்த
முதல் வார்த்தைக்காக
இன்னும் எவ்வளவு
பேச வேண்டி இருக்குமோ
இன்னும் எவ்வளவு மௌனங்களை
கடந்து செல்ல வேண்டுமோ
வேர்களை பத்திரப்படுத்தும்
பூந்தொட்டி
மெல்ல தீண்டுகிறது
உதிர்ந்து விழும் மலர்களை
பற்றிய கைகள்
விலகுகின்றன பதற்றம்
ஏதுமற்று
மெல்லத் திரும்புகிறோம்
அவரவர்
வெளிகளுக்கு
விட்டுச்சென்ற
நம் கால்தடங்கள்
மட்டும் பேசிக்கொண்டேயிருக்கின்றன
இறுக்கமான போர்வை
மேலும்
ஈரமான கனவொன்று
வேண்டும்
அல்லது
இந்த மாலையை
எதிர்கொள்ள
ஒரு
ஆழமான
முத்தம் மட்டும்
special Dedication: Mr and Mrs.Ambakur
என்னை தொடர் பதிவிற்கு அழைத்த லாவண்யாவிற்கு நன்றி.
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
லஷ்மண் ஆக பிறந்து இலக்குவனாகி இப்பொழுது இராவணன்
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
கண்கள் கலங்குவது என்றால் சில இரவுகளுக்கு முன் மிகுந்த மகிழ்ச்சியில் ஒரு தாலாட்டின் நீட்சியாக
மனம் கலங்குவது என்றால் இந்த நொடியில் கூட. யார் கல் எறிந்தார்கள் என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
சத்தி்யமா இல்லை ;)
4.பிடித்த மதிய உணவு என்ன?
முருங்கை சாம்பார் ;)
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
ம்ம்ம். துளிர்த்து வேர்த்து (வியர்த்து அல்ல) பின் வீழ்ந்தும் விடும் சில நாட்களிலே.
சிலவைகையல் நீண்டு கொண்டே இருக்கிறது என் பாதையில் துனையாக நிழலாகவும்.
பெரும்பாலான உறவுகள் உடனே தொடங்கியது தான் (வாழ்க்கை மிக சிறியது மக்களே)
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடல் பிடிக்கும் (பழவேற்காடு கரையில்)
அருவி - எனக்கும் அதற்குமான உறவு மிக உன்னதமானது. குளிக்க மட்டுமல்ல குதிக்ககூட விரும்புவேன்
அதி்ரபல்லி(கேரளா) மற்றும் high forest (வால் பாறை)
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அறிமுகமற்ற ஆண் - உடல் அசைவுகள் (body language)
அறிமுகமற்ற பெண் - கண் , முகம் மற்றும் முலை
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடிச்சது : உண்மைக்குள் ஒளிய முயற்சிப்பது
பிடிக்காதது: பொய்சொல்ல முயற்சித்து (அலுவலகத்தில் மட்டும்) தோற்பது
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
சரி பாதி யாருன்னு தேடி சலிச்சிட்டேன். நீங்க வேற.
10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
யாரும் பக்கதுல இல்லைன்னா வருந்துவேன்
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
அடப்போங்கப்பா. ;)
12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?
சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும் :))) (radio mirchi)
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
வானத்தின் நீலம்
14.பிடித்த மணம்?
பெண்களின் வாசனை திரவியங்கள்
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
பதி்விடப்படாத கவிதை ஒன்று
17. பிடித்த விளையாட்டு?
விளையாட்டு என்பது உன் அருகாமையை நான் கொண்டாடுவதே (காடு- ஜெ.மோ)
18.கண்ணாடி அணிபவரா?
இப்ப இல்ல.
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
ingmar bergman and micheal angel antonioni
மகேந்திரன்
20.கடைசியாகப் பார்த்த படம்?
பசங்க (அருமை.)
21.பிடித்த பருவ காலம் எது?
உன் அருகாமையோடு எல்லா காலமும்.எல்லா பருவமும் அழகுதானே.
22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
ஆத்மாநாம் கவிதைகள் (மீள் வாசிப்பு)
நீராலானது. (மனுஷ்யபுத்திரன்)(மீள் வாசிப்பு)
23.உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
எனக்கு பிடித்த புகைப்படம் எடுக்கும் பொழுது
24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது:மௌனம் மட்டும் மௌன ராகம்
பிடிக்காதது: எனக்கு புரியாத மொழியில்
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
rajasthan
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
தனிமை கொடுத்த திறமை நிறைய இருக்கு.
காலம் திசைகாட்டுமென காத்திருக்கிறேன்
புகைப்படம்
கவிதை
திரைக்கதை
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
பிரிவு
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
காமம்
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
அதிரபள்ளி அருவி
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
உயிர்ப்போடு
31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?
மனைவி இல்லாதவங்க கிட்ட இப்படி கேட்டா அப்புறம் dont plug words from my mouths :)
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
கனவுக்கும் நினைவுக்கும் இடையே ஆடிக்கொண்டிருக்கும் ஒரு கடிகாரம்
ஏறத்தாழ
2532 சட்டங்களின் படி
நான் தண்டனை பெறும் குற்றவாளி
மறைத்தும் தப்பித்தும்
வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்
திருமணத்திற்கு
பிறகு
இன்னும் கூடுதலாக
சில சட்டங்களின் படி
வெற்றுக்கோப்பை - ராஜா சந்திரசேகர்
வெற்றுக்கோப்பை போதும்
என் தாகம் தீர்க்க
நீர் நிரம்பிய பாத்திரங்கள்
அதிகரிக்கவே செய்யும்
தாகத்தை
------------------------------------------------------------
முடிவிலி - ரெஜோவாசன்
ஒவ்வொரு பின்னிரவின் கரு நிழலிருளிலும்
சுடும் கரை மணல் தொடுகையிலும் …
நிசப்த்தமான தெருக்களில்
நீண்ட தனி நடைகளிலும் …
மழை முடிந்த பின்
ஆடைகள் ஊதிப் பார்க்கும் வாடையிலும் …
கூட ஒட்டி வரும் தனிமையிலும் …
தேடிப்பார்க்கிறேன்
நாம் சந்தித்ததற்கான தடையங்கள்
ஏதேனும் உளதா என ..
நேற்றைய சந்திப்புகள் வெகுதூரம்
தாண்டிச் சென்றுவிட்டிருக்கின்றன
இன்றுகள் தொடர்ச்சியாக
இணைந்து கொண்டிருக்கின்றன அதே
இரயிலின் கடைசிப் பெட்டிகளாக ...
தவிர்க்க முடிவதில்லை
தென்னங் கீற்றுகளிடை
சிரித்திடும் விண்மினிகளின்
நினைவு படுத்துதலை ...
தனித்துண்ணும் எனை எள்ளும்
முட் கரண்டிகளின்
வளைந்து குத்தும் பரிகாசங்களை ...
வெகுநேரம்
வெறித்துப் பார்க்கப்படும்
புத்தகங்கள் வெறுப்புற்றுக் காற்றுடன்
உரையாடும் சரசரப்பை ...
நடு இரவில்
தன் நிர்வாணம் பார்க்கப்படுவதை விரும்பாமல்
வெளிச்சம் சுருக்கிக் கொள்ளும்
இரவு விளக்கின் பின்
ஒளிந்து கொள்ளப் போகும்
சுவர் பல்லியை ..
தவிர்க்க முடிவதில்லை
மீண்டும் மீண்டும்
சுற்றிச் சுழன்று
மாட்டிக் கொள்கிறேன்
மெல்லினங்கள் ஏற்படுத்தும்
மீள முடியாக் காயங்களில் …
சுழல் மீண்டு வரும் பொழுது
எல்லாம் மறந்து
தேடத் துவங்குவேன் மீண்டும்
நாம் சந்தித்ததற்கான தடையங்கள்
ஏதேனும் உளதா என ..
எல்லாத் தடயங்களையும்
என்னுள் தொலைத்துவிட்டு
இல்லை ..
மறைத்து வைத்த இடம்
மறந்து விட்டு போய் விட்டு
© Blogger templates Palm by Ourblogtemplates.com 2008
Back to TOP