மனோநிலை -3


அடிமைகளை உருவாக்குவது எப்படி - அனிதா

மிக எளிது.
ஒரு புன்னகையில் துவங்கி
நட்பு, பிரியம் என மெல்ல, மிக மெல்ல
முன்னேறவும்.
உனக்கென நான் (மட்டுமே) இருக்கிறேனென
புரிதல் உண்டாக்கவேண்டும்

ஆரத்தழுவிக்கொள்ளலாம்
காமம் இல்லாமலும்
பின் காமத்தோடும்.

என்னைப் பிரிந்தால்
விஷப்பாம்புகளுக்கு இரையாவாய் என்றும்
எச்சில் இலைகளிலிருந்து
உணவு உண்ண நேரும் என்றும்
எச்சரித்தபடியிருப்பது உசிதம்

எண்ணற்ற முத்தங்கள்
நேரம் காலம் பார்க்காமல் தரவேண்டும்
பெறவேண்டும்.

வெளிர் நீல வானில்
பறவைகள் பறப்பதைக் காட்டுவது
சுதந்திரமாய் இருப்பதாய் நினைத்துக்கொள்ள உதவும்.

ஆயிற்று.
வருடத்திற்கோர் அடிமையை சுலபமாய் உருவாக்கலாம்

மிகக் கவனம்...
அடிமைகள் உங்களைப்பற்றி
பேசிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளவும்

அனிதா கவிதைள்

Read more...

மனோநிலை - 2

ஆத்மநாம் கவிதைகள் என்னை மிகவும் பாதித்தவை.

என் (என்னை போன்ற பிறநண்பர்கள்) இன்றைய மனநிலையே அப்படியே உணர்த்தும் இந்த கவிதையை அகநாழிகை பதிவில் படித்தேன்.


ஏதாவது செய் - ஆத்மாநாம்

ஏதாவது செய் ஏதாவது செய்
உன் சகோதரன்
பைத்தியமாக்கப்படுகிறான்
உன் சகோதரி
நடுத்தெருவில் கற்பிழக்கிறாள் சக்தியற்று
வேடிக்கை பார்க்கிறாய் நீ
ஏதாவது செய் ஏதாவது செய்
கண்டிக்க வேண்டாமா
அடி உதை விரட்டிச்செல்
ஊர்வலம் போ பேரணி நடத்து
ஏதாவது செய் ஏதாவது செய்
கூட்டம் கூட்டலாம்
மக்களிடம் விளக்கலாம்
அவர்கள் கலையுமுன்
வேசியின் மக்களே
எனக் கூவலாம்
ஏதாவது செய் ஏதாவது செய்
சக்தியற்று செய்யத்தவறினால்
உன்மனம் உன்னைச் சும்மா விடாது
சரித்திரம் இக்கணம் இரண்டும் உன்னை
பேடி என்றும்
வீர்ய மிழந்தவன் என்றும்
குத்திக் காட்டும்
இளிச்ச வாயர்கள் மீது
எரிந்து விழச்செய்யும்
ஆத்திரப்படு
கோபப்படு
கையில் கிடைத்த புல்லை எடுத்து
குண்டர்கள் வயிற்றைக் கிழி
உன் சகவாசிகளின் கிறுக்குத்தனத்தில்
தின்று கொழிப்பவரை
ஏதாவது செய் ஏதாவது செய்

--ஆத்மநாம்

Read more...

மனோநிலை - 1

நாய்கள் - நகுலன்

நானும் நாய்களைப் பார்த்திருக்கிறேன்
அவைகளின் அகாலத் துயிலை
அகலும் புட்டியைச் சுவைக்க
அவை செய்யும் வீண் முயற்சிகளை
வாந்தியை முழுங்குவதை
பேசுவதை நிறுத்தமுடியாமல் தவிப்பதை
பெண் துவாரம் தேடி அலைவதை
உணவு தடுக்கப்பட்டால் கடிப்பதை

-நகுலன் (நாய்கள்)

Read more...

இராவணன்

எல்லோருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு.இன்று முதல் மகாகவி திரு. இலக்குவண் அவர்கள் இராவணன் என்றே அழைக்கப்படுவார் ;)))

அன்புடைய நண்பர்களுக்கு,

இன்று முதல் என்னுடைய பெயரை இராவணன் என்று மாற்றியமைக்கிறேன்.அவ்வாறே என்னை அனைவரும் அழைக்கவேணும் என்றும் விரும்புகிறேன்.

பெயரில் என்ன இருக்கிறது?.
உண்மைதான்.
இருந்தும் இலக்குவண்(லஷ்மண்) என்ற புனித அடையாளம் முகமூடி போல சுமையாய் இருக்கிறது.இராவணன் என்பது எனக்கும் என் வாழ்விற்கும்மிகவும் நெருக்கமானதாகவும் ஒரு மனித அடையாளமாகவும் என் மொழி அடையாளமாகவும் இருப்பதாக தோன்றுகிறது.

நன்றி

பி.குறிப்பு : இங்கே புனிதம் என்பது பொது புத்தி சார்ந்த புனிதத்தை குறிப்பதே அன்றி
எந்த வார்த்தையிலும் இராவணனை தரம் தாழ்த்தி கூறுபவை அல்ல. இராவணனை மதிப்பதால் தான் அந்த பெயரை பெருமையுடன் ஏற்கிறேன்

Read more...

கால பைரவன் கண்சிமிட்டுகிறான்

பெரிதும் நிராகரிக்கபட்டவள்
ஒரு
அடிமையைக் கண்டடைகிறாள்

வேசிகள் என்று
இழிந்து திரிந்தவன்
கண்கள் பனிக்க
குழந்தையைத் தீண்டுகிறான்


காதலிக்கச்சொல்லிக் கெஞ்சியவன்
ஆழ்ந்து உறங்குகிறான்

எல்லோருக்கும்
அண்ணனாக வலம்வந்தவன்
நீலப்படங்களைத் தேடி அலைகிறான்

மென்முலைகள்
பெருத்துப் பாலூட்டி ஆகின்றன

என் இரவுகள்
சில
தினங்களுக்கு முன்
அழகாக இருந்தன


இந்த கவிதை வா.மு கோ.மு உடைய பாதிப்பு- சொல்லக்கூசும் கவிதைகள்

Read more...

கோடை

நெருக்கமான
வெயிலின் கரங்கள்
மூச்சுதிணறும்
முத்தங்கள்
நிரம்பியது

சூரியப்புணர்தலில்
பொதுஇடத்தில்
நிரம்பி வழிகிறது
வியர்வை
எப்படி இருக்க வெட்கப்படாமல்

காற்றுக்கேங்கும்
மனிதப்பார்வையை
அசைந்து அசைந்து
பரிகாசிக்கிறது
ஒரு பசுந்துளிர்
வெளிச்சம் வழிய

(இந்த வலைப்பூவைப்போல)

Read more...

சற்றே தாமதமாக

1.
சாலைகள் பூக்களாகின
நகரம் தடாகம் ஆனது

காலப்படிகளில்
கண்
இமையைக்
கண்டடைந்தது

இனி எந்த
தூசிக்கு
இங்கு
இடமில்லை


2.
கத்திக்கொண்டிருந்தக்
குழந்தைக்குப்
பால்சோறு

தனிமை
இறந்தகாலம்

தடாகம்
முழுதும் நனைந்திட


நாங்கள்
கவிதை
எழுதிக்கொண்டிருக்கிறோம்

Read more...

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP