கால் தடங்கள்

பற்றிய கைகள்
விலகுகின்றன பதற்றம்
ஏதுமற்று

மெல்லத் திரும்புகிறோம்
அவரவர்
வெளிகளுக்கு

விட்டுச்சென்ற
நம் கால்தடங்கள்
மட்டும் பேசிக்கொண்டேயிருக்கின்றன

15 :பின்னூட்டங்கள்:

யாத்ரா June 12, 2009 at 11:03 AM  

நல்ல கவிதை நண்பா

//விட்டுச்சென்ற
நம் கால்தடங்கள்
மட்டும் பேசிக்கொண்டேயிருக்கின்றன//

சொற்ப நேரத்தில் கால்தடங்களும் மறைந்து விடுமல்லவா :(

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி June 12, 2009 at 11:20 AM  

சாமி முடியல. எங்க போனாலும் சுத்தி சுத்தி அடிக்கிறாங்க...

//பத்தற்றம்//

எதோ பதற்றம்... அருமை...

நன்றாக இருக்கிறது...

நந்தாகுமாரன் June 12, 2009 at 11:33 AM  

இதுவும் இதற்கு முந்தையதும் எனக்கும் பிடித்தது

Sugirtha June 12, 2009 at 7:18 PM  

மறுபடியும் பிறந்தால்
கால் தடங்களாய் பிறக்கலாம்
சேர்ந்தே இருக்க

நல்ல கவிதை ரசித்தேன்.

அகநாழிகை June 12, 2009 at 7:47 PM  

இராவணன்,
நல்ல கவிதை.

‘பதற்றம்‘ என்று வார்த்தையை சரி செய்யுங்கள்.

அதே போல ‘மெல்லத் திரும்புகிறோம்‘ என்றிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் June 12, 2009 at 8:20 PM  

ரசித்தேன்

-ப்ரியமுடன்
சேரல்

பிரவின்ஸ்கா June 12, 2009 at 8:44 PM  

// விட்டுச்சென்ற
நம் கால்தடங்கள்
மட்டும் பேசிக்கொண்டேயிருக்கின்றன //

அருமை .

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

இராவணன் June 13, 2009 at 3:35 AM  

மிக நன்றி யாத்ரா

//சாமி முடியல. எங்க போனாலும் சுத்தி சுத்தி அடிக்கிறாங்க...//
ஏங்க கோகுல்.:)
மிக நன்றி
//
இதுவும் இதற்கு முந்தையதும் எனக்கும் பிடித்தது//
மிக நன்றி நந்தா

//மறுபடியும் பிறந்தால்
கால் தடங்களாய் பிறக்கலாம்
சேர்ந்தே இருக்க//
ம்.சரிங்க.மிக நன்றி சுகிர்தா.

மிக நன்றி அகநாழிகை. கொஞ்சம் தடுமாற்றத்தில் எழுதினேன். வார்த்தைப்பிழைகளோடு.

நன்றி சேரல்

நன்றி பிரவிண்ஸிகா

கலையரசன் June 13, 2009 at 8:12 AM  

//விட்டுச்சென்ற
நம் கால்தடங்கள்
மட்டும் பேசிக்கொண்டேயிருக்கின்றன//

அருமையா எழுதுறீங்களே... அருமையான கவிதை...
நல்லாயிருக்கு... நிறைய எழுதுங்கள்!!

இராவணன் June 13, 2009 at 9:07 AM  

மிக நன்றி கலையரசன்

ரகசிய சிநேகிதி June 14, 2009 at 1:36 AM  

அழகான கவிதை..ரசித்தேன் :)

இராவணன் June 14, 2009 at 8:53 PM  

மிக நன்றி தோழி

ச. ராமானுசம் June 23, 2009 at 1:41 AM  

அருமையான சிந்தனை ..

வாழ்த்துக்கள்

ச. ராமானுசம் June 23, 2009 at 1:42 AM  

அருமையான சிந்தனை ..

வாழ்த்துக்கள்

உயிரோடை July 1, 2009 at 7:54 PM  

அய்யோ செம‌ க‌விதைங்க‌ ல‌ஷ்ம‌ண். வ‌ர‌ வ‌ர‌ புரிய‌ற‌ மாதிரியும் பிழிய‌ற‌ மாதிரியும் எழுத‌ ஆர‌ம்பிச்சிடிங்க‌

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP