சென்னையில் மாபெரும் ஒன்றுகூடல்பெப்ரவரி 22 - 2009 மெரினா கடற்கரை போர்நினைவகம் முதல் காந்திசிலை வரை - இன அழித்தலுக்கு எதிரான இந்தியர்கள்

அன்புள்ள நண்பர்களுக்கு,
நிறைய பேசியாயிற்று
நிறைய விவாதித்தாயிற்று
மனிதாபிமானம் பற்றி
தற்கொடைப்பற்றி

தற்கொலையின் முட்டாள்தனம் பற்றி
தற்கொலையின் தியாகம் பற்றி
ராஜீவ் காந்தியின் கொலைப்பற்றி
அதன் துன்பியல் பற்றி
அதன் மர்மங்கள் பற்றி

இந்திய தேச இறையாண்மைப்பற்றி
தடைசெய்யப்பட்ட இயங்கங்கள் பற்றி
அவைகளைப்பற்றிபேசுவதின் சட்ட சிக்கல் பற்றி
அந்த தடையின் நியாயங்கள் பற்றி

அந்த தடையை உடைபதைபற்றி
இனவெறுப்புகள் பற்றி
மனிதக்கேடயங்கள் பற்றி
பாதுகாப்பு வலையம் பற்றி

Cocentration Camp பற்றி
இந்திய தேசிய ஒருமைப்பாடு பற்றி
தமிழ்தேசிய பிரிவினைவாதம் பற்றி
இந்தியனாய் இனைவோம் பற்றி
தமிழனாய் எழுவோம் பற்றி



பயங்கரவாதிகள் பற்றி
விடுதலைப்போராளிகள் பற்றி
மதவெறிகளைப்பற்றி
எல்லாம் கடந்த மனிதநேயம் பற்றி


எல்லாம் கடந்து ஒன்று மட்டும் நிச்சயம்
அங்கே பிணங்கள் குவிவதை யாரும் மறுப்பதற்கில்லை.
இன அழித்தல் நடப்பதை யாரும் அறியாமலில்லை

பிணங்களின் மேல் ஒன்றும் நடக்கவில்லை
என்று சத்தியம் செய்ய நாம் தயாராயில்லை


நேற்று(17- பெப்ரவரி-2009) கொல்லப்பட்ட 104 (50 குழந்தைகள் உள்பட) உயிர்களுக்காய்
இந்த புத்தாண்டில் மட்டும் இறந்த 1700 உயிர்களுக்காய் 4000 மேற்பட்ட படுகாயப்பட்டவர்களுக்காய் இதுவரை 60 ஆண்டுகளின் , இறந்த 70 000 அப்பாவி தமிழர்களுக்காய்

ஒன்று கூடுவோம் ஒரே குரலாய் ஒரே குறிக்கோளோடு
‘போர் நிறுத்தம் வேண்டும் . இனஅழித்தலை நிறுத்த வேண்டும்’

எந்த அரசியல் உள்நோக்கமுமில்லை. எந்த அரசியல் கட்சியுமில்லை
பொதுமக்கள் இனைந்து பொதுமக்களால் நடத்தப்படும் இந்த மாபெரும் அமைதி நடைக்கு ஒன்று கூடுவோம்

இடம்: போர் நினைவகம் தொடங்கி காந்தி சிலை வரை, மெரினா கடற்கரை, சென்னை
நாள் : 22- பெப்ரவரி – 2009 (ஞாயிறு)
நேரம் : மாலை 4 மணி

குடும்பத்தோடு வாருங்கள்.
இந்த அமைதி நடையில் நடக்கும் ஒவ்வொருவராலும் அங்கே ஓர் உயிர் பிழைக்கும்.
2 ½ இலட்சம் அப்பாவித்தமிழர்கள் உங்களை கையேந்தி நிற்கிறார்கள்.

ஓர் இனம் அழியும் பொழுது நடுநிலைமை என்பது மனிதத்தன்மை அல்ல
ஒன்று படுவோம் இன அழித்தலைத் தடுப்போம்



இலக்குவண்
இனஅழித்தலுக்கு எதிரான இந்தியர்கள்
www.indiansagainstgenocide.org

Read more...

பின்பனிக்காலம் ,100 அடி சாலை, காலை ஒன்பது மணி

உலகெலாம்
உடல்கலாயின

அடைப்புக்குறிகளாய்
ஆடைகள்

முத்தம் தூண்டும்
இதழ்கள்

வழி நெடுகும்
முலைகள்
மெட்டிகள்
மி்கச்சில முகங்கள்

உயிர் கூச
இமைகளை மூடி
கண்களை
புதைக்கிறேன்
நினைவுத்தூண்களில்
கோயில் சிலைகள்
வழிபட யாருமற்று
வளரத்துவங்குகிறது
கடவுளின் அழகியலோடு
லிங்கம் ஒன்று


நீயற்ற பொழுதில்
உலகமெல்லாம்
வெறும்
உடல்கலாயின

Read more...

என்னால் இயன்றது

நிச்சயமாக சொல்லமுடியும்
தொடரும் செல்(cell) லடி சப்தம்
தாளாது அழும் கைக்குழந்தைக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
எந்த நாடும்
எந்த இயக்கமும்
முக்கியமாக
எந்த மொழியும்


எம் இறையாண்மையை
பாதுகாக்கும் பொருட்டு
என்னால் இயன்றது
இனி இந்த
உறக்கமற்ற இரவில்
பரத்தையின் முலையை
நகங்களால்
காயப்படுத்த மட்டுமே

Read more...

இந்த சில மனிதர்கள்

முன்பின் கதவுகளை மூடியாயிற்று
யன்னல்களையும் சேர்த்து

உள்ஊடுறவும் வெளிச்சம் மறைக்க
இமைகளை இறுக்கிக்கொள்கிறேன்

என்னுடையதானது
உலகம்
சற்றே
பாதுகாப்பானதாகவும்

மெல்ல
மிக மெல்ல
சப்தமிடதொடங்குகிறது
மனதின் வெறுமை
வயிற்றை அடைந்து

இனி இந்த நாளை
இந்த மனிதர்களை
இவர்களுக்கான சில பல வார்தைகளை
மூடிய கதவைத்திறப்பது போல்
கவனத்துடன்
வெளியேற்றவேண்டும்

முன் மூடியிருந்ததற்கான அடையாளங்களை
யாருமறியுமுன் துடைத்தெரியவும்

Read more...

தமிழ் சினிமா - சில கேள்விகள்

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்

எந்த வயதில் முதல் படம் என்று நினைவில்லை.
என் நினைவில் நிழலாடும் படம் 'புன்னகை மன்னன்'. அந்த அருவி ஓர் ஆழமான அதிர்வுகள் மனதில் அந்த சிறு வயதில் ஏற்படுத்தின.இன்று வரை அந்த அதிர்வுகள் நிற்கவில்லை அந்தப்படத்தையோ அருவியையோ நோக்குகையில்


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

சரோஜா. மிகவும் கவர்ந்த திரைப்படம்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

மௌனராகம். வீட்டில். இன்னும் ப்லமுறை பார்ததாலும் சலிக்காது.

.4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

அவள் அப்படித்தான் மற்றும் முள்ளும் மலரும். இரண்டிலும் பார்த்து வியந்த ரஜி்னிக்காக இன்றும் ஏங்கிக்கொண்டிருக்கிறேன். மேலும் அந்த படங்களின் எதார்த்த மனிதர்க்ளை பிறகு வேறெந்த படத்திலும் என்னால் பார்க்கமுடியவில்லை. (கவனிக்க: உதி்ரி்பபூக்கள் நான் இன்னும் பார்க்கவில்லை)

.5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
தனிப்பட்டு எதுவும் சொல்லத்தெரியவில்லை.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
ஒரு கலையில் technical விஷ்யங்கள் வெளிப்படையாக இல்லாமலிருப்பதே சிறப்பு.

இருந்தும் சமீபத்தில்
சுப்ரமணியபுரம் (கலை மற்றும் ஒளிப்பதிவு)
பொல்லாதவன் (ஒளிப்பதிவு)
7/g ரயின்போ காலனி(ஒளிப்பதிவு) என்னை மிகவும் கவர்ந்த்வை.


6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

பெரும்பாலும் நம் விமர்சகர்கள் உணர்ச்சிவசப்பட்கூடியவர்களாக இருப்பதால் விமர்சனங்களை நம்புவது மிகவும் கடினம்


7.தமிழ்ச்சினிமா இசை

இளையராஜா வின் இசை தான் இன்றுவரை என்னோடு பயனித்துக்கொண்டிருக்கிறது.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

பிற மொழி இந்திய மொழிப்படம் :

1.MR and Mrs Iyer
2.The Terrorist

உலகப்படங்கள் :

Blow Up
Amile (French)


The Apple(Iranian)
White Baloon(Iranian)
Children of heaven (Iranian)
Color of paradise(iranian)
TEN (Iranian)
Life and Nothing Else (Iranian)
Colour of paradise(Iranian)
The Circle (Iranian)

NUOUO Cinema paradiso (Italian)
ThE sons Room(ITALIAN)
DONT TELL (ITALIAN)

In the mood for love (Hong kong)
Fallen Angels(Hong kong)

CENTRAL STATION (Brazil)
the way home(South Korean)

My Life as a DOG (SWEDISH)
The silence (SWEDISH) (Ingmar bergman)

LE Papillon( The Butterfly) (French)

RED BEARD(JAPANEESE)

THE SEA INSIDE(SPANISH)

THE Prestige(English)
Sex and Philosophy(English)

THE PARADISE NOW(Arabic)

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

மாமல்லன் கார்த்திக் : இயக்குனர்.3 சிறந்த குறும்படங்கள் இதுவரை இயக்கி உள்ளார்.அவற்றில் 'இடைவெளி' என்னை மிகவும் பாதித்த படம். மேலும் உலக புகழ் இலங்கை இயக்குனர் பிரசன்னா விதாநகே ('prasanna vithanage') உடன் அவருடைய புதிய படம் ஒன்றில் பணிபுரிந்துள்ளார்.

சந்தோஷ் நம்பிராஜன்:துனை ஒளிப்பதிவாளர்

இருவரும் தனிப்பட்டு அறிமுகமானவர்கள். இருவரும் நல்ல சினிமா மீதான நம்பிக்கையோடு இயங்குபவ்ர்கள்.
சினிமா குறித்து தெளிவான புரிதலும் சினிமாவிற்கு இலக்கியம் வாசிப்பு மிக முக்கி்யமானது என்று அறிவுறுத்துபவர்கள்

சினிமா என்ற கலை மீதான புரிதல் குறித்து அதிகம் விவாதிப்பதுன்டு. அதில் அவர்களைவிட எனக்கு அதிக பயன் கிட்டியது.


10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மக்கள் மாற்றங்களை எதிர்பார்க்க தொடங்கியிருக்கிறார்கள்.எனவே எல்லாம் நல்லதாகவே இருக்கும் என்று ந்ம்புகிறேன்


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

மேல் சொன்னது சத்தியமாக சாததியமில்லை.
அப்படி நடக்குமாயின் கீ்ழ் சொல்வதும் நடக்கலாம்

மக்கள் அதிகம் இலக்கியம் படிக்க தொடங்கலாம்


இலக்குவண்

என்னை அழைத்தமைக்கு நன்றி சித்தார்த்
(http://angumingum.wordpress.com/2008/10/12/tamilcinema/)

Read more...

கடவுளும் இன்னபிற.....

வெளிச்சம்
பயத்தை ஏற்படுத்த
தொடங்கும் வரை
பாதைகள் எளிமையாகவே இருந்தன
இருளின் மீதான அனுமானங்களும்

Read more...

காமம்

சில புள்ளிகளை
இணைத்து
அழகான கோலங்களாக்கி
இந்த
இரவின் விரல்
பிடித்து விடியலுக்கு
அழைத்து செல்

Read more...

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP