காதல்

மீண்டும்
நடுங்குகிறது தண்டவாளம்

மீண்டும்
இதயம் இரண்டாகும் சப்தம்
காதைக்கிழிக்கிறது

மீண்டும்
சில நிமிடங்களில்
நீளும்பார்வையில் கூசும்
வெறுமை

மீண்டும்
விரல்கள் மறைக்கும்
கண்ணீரம்

மீண்டும்
அமைதி

மீண்டும்
இன்னும் சில நிமிடங்களில்
நிச்சயமாய்
தெரியும்
தண்டவாளம் நடுங்கும்

5 :பின்னூட்டங்கள்:

M.Saravana Kumar August 4, 2008 10:42 AM  

மீண்டும்..
மீண்டும்....
இந்த காதல் ஒரு பைத்தியகாரத்தனம்.....

M.Saravana Kumar August 19, 2008 2:15 PM  

அடுத்த பதிவு எப்போது நண்பரே??

இலக்குவண் August 20, 2008 7:40 PM  

;))),

தெரியலை நண்ப.

நர்மதா August 20, 2008 8:36 PM  

இணையாத இரு கோடுகளாக தண்டவாளம் இருந்தும் அதில் பயணிக்கும் தொடர் வண்டியின் பயன் மகத்தானது. காதல், பிரிவுகள், கண்ணீர், அனைத்திலும் இருந்து வாழ்வை நிதானப்படுத்த நிறைய பாடங்கள் கற்றுக்கொள்ளலாம். வாழ்வின் வலிகள் மிக சிறந்த ஆசான்.

M.Saravana Kumar August 22, 2008 10:45 AM  

வேலை பளுவா?? இல்லை அடுத்த கவிதை உருவாகவில்லையா??

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP