காமம்

சில புள்ளிகளை
இணைத்து
அழகான கோலங்களாக்கி
இந்த
இரவின் விரல்
பிடித்து விடியலுக்கு
அழைத்து செல்

அன்பின் நிழல்

நிழல்களாலான
என் அறையின்
இருள்
உன் பயங்களுக்கும் கற்பனைகளுக்கும்
உணவாகிறது

முதலில் யன்னலை
பின்
கதவை திறந்து வைத்தேன்
உனக்கான
வெளிச்சம் தேடி
இப்பொழுது
அதன் சுவர்களை
இடித்துக்கொண்டிருக்கிறேன்

காதல்

மீண்டும்
நடுங்குகிறது தண்டவாளம்

மீண்டும்
இதயம் இரண்டாகும் சப்தம்
காதைக்கிழிக்கிறது

மீண்டும்
சில நிமிடங்களில்
நீளும்பார்வையில் கூசும்
வெறுமை

மீண்டும்
விரல்கள் மறைக்கும்
கண்ணீரம்

மீண்டும்
அமைதி

மீண்டும்
இன்னும் சில நிமிடங்களில்
நிச்சயமாய்
தெரியும்
தண்டவாளம் நடுங்கும்

இருத்தல்

அழுகிய பழத்தில்
உனக்கு அருவருப்பாய்
நெளியும் புழு உண்மையில்
நிகழ்துவது
எளிமையான ஒரு வாழ்க்கைக்கான
போராட்டத்தை மட்டுமே

மரநிழலில்

நீண்ட நாட்களுக்கு பின்
மெல்லுணர்வுகளை
அர்த்தப்படுத்தி
என் உடல் மேல்
ஓர் உயிர் ஊர்ந்துகொண்டிருக்கிறது


நீண்ட நாட்களுக்கு பின்
சற்றே
ஒரு மரநிழலில்
கண்ணுறங்கிகொண்டிருக்கிறேன்

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP