வெற்றுத்திண்ணை

தூசிகள் படர்ந்த
வெற்றுத்திண்ணை
சற்றே வேகமாக
கடந்திருக்குமோ வாகனங்கள்

சில நிமிடங்கள் கொடுங்கள்

தயவுசெய்து
சில நிமிடங்கள் கொடுங்கள்
ஆடைகளை களைகிறேன்
விலங்காகிறேன்
பின் கண்டிப்பாக வாலாட்டுகிறேன்

முதல் நாள் முதல்

எனக்கு இந்த dress வேணாம்.எனக்கு அந்த பூப்போட்டது தான் வேணும்

நீ இப்போ schoolக்கு போகப்போற.இது uniform dress.இதை போட்டாதான் schoolக்கு போகமுடியும்.

எதுக்கு school போகனும்?

படிக்கனும் னா school போகனும்டா கண்ணு.

அப்ப நான் படிக்கல.

முதல் நாளே இப்படி சொல்லாத கண்ணு.படிச்சாதான் வேலைக்கு போகமுடியும்.வேலைக்கு போனாதான் பணம் சம்பாதிக்கமுடியும்.

எனக்கு இப்ப அந்த dress தான் வேணும்.பணம் எல்லாம் வேணாம்.

பணம் இருந்தாதான் கண்ணு நல்லா வாழமுடியும்.


எவ்வளவு பொய்கள்....

பூப்பறித்தல்

எதிர்பார்க்கவேயில்லை
இந்தக்காலைப்பொழுதில்
சற்றுமுன் மலர்ந்த
பூ
பறிக்கபடுமென்று

தவிப்பு

திசை மாறிய
பெரும் காற்றில்
என் அறையின்
எல்லா கதவுகளும்
அடைவதும் திறப்பதுமாய்

அவசரமாக

மேகம் சூழ்ந்த மாலையில்
அவசரமாக
வானம் பார்த்தனர்

யாரும் நிற்பதில்லை
நிறுத்தங்களில் கூட
கோடையில் கூட

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP