சென்னையில் மாபெரும் ஒன்றுகூடல்பெப்ரவரி 22 - 2009 மெரினா கடற்கரை போர்நினைவகம் முதல் காந்திசிலை வரை - இன அழித்தலுக்கு எதிரான இந்தியர்கள்

அன்புள்ள நண்பர்களுக்கு,
நிறைய பேசியாயிற்று
நிறைய விவாதித்தாயிற்று
மனிதாபிமானம் பற்றி
தற்கொடைப்பற்றி

தற்கொலையின் முட்டாள்தனம் பற்றி
தற்கொலையின் தியாகம் பற்றி
ராஜீவ் காந்தியின் கொலைப்பற்றி
அதன் துன்பியல் பற்றி
அதன் மர்மங்கள் பற்றி

இந்திய தேச இறையாண்மைப்பற்றி
தடைசெய்யப்பட்ட இயங்கங்கள் பற்றி
அவைகளைப்பற்றிபேசுவதின் சட்ட சிக்கல் பற்றி
அந்த தடையின் நியாயங்கள் பற்றி

அந்த தடையை உடைபதைபற்றி
இனவெறுப்புகள் பற்றி
மனிதக்கேடயங்கள் பற்றி
பாதுகாப்பு வலையம் பற்றி

Cocentration Camp பற்றி
இந்திய தேசிய ஒருமைப்பாடு பற்றி
தமிழ்தேசிய பிரிவினைவாதம் பற்றி
இந்தியனாய் இனைவோம் பற்றி
தமிழனாய் எழுவோம் பற்றி



பயங்கரவாதிகள் பற்றி
விடுதலைப்போராளிகள் பற்றி
மதவெறிகளைப்பற்றி
எல்லாம் கடந்த மனிதநேயம் பற்றி


எல்லாம் கடந்து ஒன்று மட்டும் நிச்சயம்
அங்கே பிணங்கள் குவிவதை யாரும் மறுப்பதற்கில்லை.
இன அழித்தல் நடப்பதை யாரும் அறியாமலில்லை

பிணங்களின் மேல் ஒன்றும் நடக்கவில்லை
என்று சத்தியம் செய்ய நாம் தயாராயில்லை


நேற்று(17- பெப்ரவரி-2009) கொல்லப்பட்ட 104 (50 குழந்தைகள் உள்பட) உயிர்களுக்காய்
இந்த புத்தாண்டில் மட்டும் இறந்த 1700 உயிர்களுக்காய் 4000 மேற்பட்ட படுகாயப்பட்டவர்களுக்காய் இதுவரை 60 ஆண்டுகளின் , இறந்த 70 000 அப்பாவி தமிழர்களுக்காய்

ஒன்று கூடுவோம் ஒரே குரலாய் ஒரே குறிக்கோளோடு
‘போர் நிறுத்தம் வேண்டும் . இனஅழித்தலை நிறுத்த வேண்டும்’

எந்த அரசியல் உள்நோக்கமுமில்லை. எந்த அரசியல் கட்சியுமில்லை
பொதுமக்கள் இனைந்து பொதுமக்களால் நடத்தப்படும் இந்த மாபெரும் அமைதி நடைக்கு ஒன்று கூடுவோம்

இடம்: போர் நினைவகம் தொடங்கி காந்தி சிலை வரை, மெரினா கடற்கரை, சென்னை
நாள் : 22- பெப்ரவரி – 2009 (ஞாயிறு)
நேரம் : மாலை 4 மணி

குடும்பத்தோடு வாருங்கள்.
இந்த அமைதி நடையில் நடக்கும் ஒவ்வொருவராலும் அங்கே ஓர் உயிர் பிழைக்கும்.
2 ½ இலட்சம் அப்பாவித்தமிழர்கள் உங்களை கையேந்தி நிற்கிறார்கள்.

ஓர் இனம் அழியும் பொழுது நடுநிலைமை என்பது மனிதத்தன்மை அல்ல
ஒன்று படுவோம் இன அழித்தலைத் தடுப்போம்



இலக்குவண்
இனஅழித்தலுக்கு எதிரான இந்தியர்கள்
www.indiansagainstgenocide.org

Read more...

பின்பனிக்காலம் ,100 அடி சாலை, காலை ஒன்பது மணி

உலகெலாம்
உடல்கலாயின

அடைப்புக்குறிகளாய்
ஆடைகள்

முத்தம் தூண்டும்
இதழ்கள்

வழி நெடுகும்
முலைகள்
மெட்டிகள்
மி்கச்சில முகங்கள்

உயிர் கூச
இமைகளை மூடி
கண்களை
புதைக்கிறேன்
நினைவுத்தூண்களில்
கோயில் சிலைகள்
வழிபட யாருமற்று
வளரத்துவங்குகிறது
கடவுளின் அழகியலோடு
லிங்கம் ஒன்று


நீயற்ற பொழுதில்
உலகமெல்லாம்
வெறும்
உடல்கலாயின

Read more...

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP